Saturday 30 August 2014

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!

தனிக்கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த்! பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு!!


சென்னை: தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார்.. என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.


மோடி சந்திப்பு


லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காமல் இருந்தார்.

தனிக்கட்சிதான் சரி


தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம்.


















ரஜினிகாந்தும் இதுதான் சரியான ரூட்டாக இருக்க முடியும் என்ற அடிப்படையில் ஆமோதித்தபடியே தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம்.









Friday 29 August 2014

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் தேதி வெளிவந்தது 



வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருதரப்பு வாதமும் முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வர இருக்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். இதனால் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?

இன்று இரவுக்குள் அழகிரி அரெஸ்ட்?



மு.க.அழகிரி திமுகவுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் தயா பொறியியல் கல்லூரிக்காக கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பாய்ந்துள்ளது, வழக்கு பதிவை தொடர்ந்து இன்று இரவுக்குள் மு.க.அழகிரி கைது செய்யப்படலாம் என மதுரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
                                          மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. தயா கல்லூரியை கட்டுவதற்காக கல்லூரியீன் அருகிலுள்ள விநாயகர் கோவிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர்  கடந்த ஜூன் மாதம் மதுரை கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இது குறித்து கடந்த மூன்று நாட்களாக மதுரை அரசு வட்டாரங்களில் நடந்த நீண்ட கலந்தாய்வுக்கு பின் மு.க.அழகிரி மீது நிலஅபகரிப்பு புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. # ஸ்டாலின் ஹேப்பி அண்ணாச்சி -