Wednesday 10 July 2013

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா

லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலை நியாயப்படுத்துகிறது, சீனா:


லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்; அத்துமீறலைபீஜிங்,

இந்திய எல்லைக்குள் படைகளின் அத்துமீறலை சீனா நியாயப்படுத்தி உள்ளது.

சீன ராணுவ வீரர்கள்

இமாசலபிரதேசம் லடாக் அருகே உள்ள ஜுமார் பகுதியில் லே என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் ஊடுருவியது. பின்னர் இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து சீன ராணுவம் இந்திய எல்லையில் இருந்து வெளியேறியது.

அதைத்தொடர்ந்து சீன ராணுவத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோபுரம் அகற்றப்பட்டு அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மீண்டும் ஊடுருவல்

இந்த நிலையில் கடந்த ஜூன் 17–ந்தேதி மீண்டும் சீன மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ஜுமார் பகுதியில் ஊடுருவி, அங்கு இந்திய ராணுவம் அமைத்திருந்த கண்காணிப்பு அமைப்புகளையும், பதுங்கு குழிகளையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களையும் துண்டித்து சேதப்படுத்தினர்.

இவ்வாறு அடிக்கடி இந்திய பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவும் சம்பவம் இந்தியாவில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாற்ற முடியாது

இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுனியிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– எல்லைப்பகுதியில் நிலைமை சீராக உள்ளது. ஊடுருவல் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நாங்கள் அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

 எங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன ராணுவத்தினர் எல்லைக்கோடு அருகே, சீனப்பகுதியில்தான் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் தற்போது இருக்கும் நிலையை யாராலும் (இந்தியாவோ – சீனாவோ) மாற்ற முடியாது. எல்லைப்பகுதியின் அமைதிக்கு இந்தியாவுடன் நாங்கள் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

எல்லையில் எதுவும் செய்யக்கூடாது என்பதை மீறி இந்தியா கண்காணிப்பு கேமராக்களை அமைத்ததால் சீன ராணுவம் அவற்றை சேதப்படுத்தியது என்னும் கருத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

 நியாயப்படுத்துகிறது, சீனா

Tuesday 9 July 2013

மீண்டும் ஷங்கருடன் கைகோர்க்கும் விஜய்

மீண்டும் ஷங்கருடன் கைகோர்க்கும் விஜய்:



தலைவா படத்தின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் விஜய், தற்போது நேசன் இயக்கத்தில் ஜில்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜில்லா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்.
முருகதாஸ்-விஜய் கூட்டணி 'துப்பாக்கி' என்ற மெகா ஹிட் படத்தை கடந்த வருடம் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதற்காக கால்ஷீட்டை பத்திரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
ஷங்கர் தற்போது விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடிக்கும் 'ஐ' பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றும், இதை முடித்து விட்டு விஜய் படத்திற்கான தொடக்கப்பணிகளில் ஷங்கர் ஈடுபடுவார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday 8 July 2013

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை


புத்த கயா: பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்பின்போது எடுக்கப்பட்ட ரகசிய காமிராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் பலரும் சிதறி ஓடும் காட்சிகள் தான் இருந்தன என்றும், இதில் குற்றவாளிகளை பிடிக்க பயன்தரும் விஷயங்கள் எதுவுமில்லை என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கிடையே பக்தர்களுக்கு கோயில் திறக்கப்பட்டது. புத்த பிட்சுள் சிறப்பு பிரார்த்னை செய்தனர்


நேற்று அதிகாலை புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதனை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ‌தொடர்பான விசாரணையி்ல் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

சி.சி.டி.வி. பதிவுகள் வெளியீடு : இந்நிலையி்ல் புத்த கயாவில் வைக்கப்பட்டிருந்த சி.சி.வி. காமிராவில் சில காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது , பார்வையாளர்கள் திடீரென ஏதோ பயங்கர சத்தம் கேட்டு அங்குமிங்கும் பதறியடித்து ஓடுவது போன்று காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ஒருவ‌ரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

மியான்மர் பயங்கரவாதிகள் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கெளுக்கென இந்தியாவில் உள்ள சில அமைப்பினர் கை கோர்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீவிரவாத செயல்கள் அதிகரிப்பதற்கு மத்திய அரசே காரணம்: மம்தா சாடல்

தீவிரவாத செயல்கள் அதிகரிப்பதற்கு மத்திய அரசே காரணம்: மம்தா சாடல்

லால்கர்க் : ""மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பதற்கு, மத்திய அரசு வலுவிழந்து இருப்பதே காரணம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.


மேற்கு வங்கத்தில், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில், லால்கர்க் என்ற இடத்தில், பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று, மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
என்னையும், திரிணமுல் காங்., தலைவர்களையும் தீர்த்து கட்டும் நோக்கில், மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த மிரட்டலை கண்டு நான் பயப்படவில்லை. மகாபோதி கோவிலில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதல்களை பார்த்து, அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, மத்திய அரசு, எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு செயலற்றதாக உள்ளது. இது போன்ற செயல்கள் எல்லாம், திட்டமிட்டு தான் நடத்தப்படுகின்றன. 

இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க, மத்திய அரசு தவறி விட்டது. இந்த சண்டையில், நம் வீரர்கள் உயிர் இழக்கின்றனர். ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து, மாவோயிஸ்ட்கள், மேற்கு வங்கத்தில் ஊடுருவுகின்றனர். இங்கு இவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். வன்முறை எந்த ரூபத்தில் வந்தாலும், அதை பொறுத்து கொள்ள முடியாது. ஜங்கல்மகாலில், மாவோயிஸ்ட்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். என்னையும், திரிணமுல் தலைவர்களையும் குறி வைத்து, தற்கொலைப் படையை அமைத்துள்ளனர்.இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.

Wednesday 3 July 2013

6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :


6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :



உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்கம், ஏதென்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுக்கான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க தகவல் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரமிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் தூத்துகுடி வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Monday 1 July 2013

முகுல் வாஸ்னிக்குடன் தங்கபாலு ஆதரவாளர்கள் சந்திப்பு: ஞானதேசிகன் எதிர்ப்பு

 முகுல் வாஸ்னிக்குடன் தங்கபாலு ஆதரவாளர்கள் சந்திப்பு: ஞானதேசிகன் எதிர்ப்பு


தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை, நேற்று முன்தினம் இரவு, சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் 50 பேர், தனியாக சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள், "தங்கபாலு நியமித்த, 18 மாவட்டத் தலைவர்களை மாற்றக் கூடாது' என, வலியுறுத்தினர்.

முகுல் வாஸ்னிக்கை, தனியாக சந்தித்து பேச, எந்த கோஷ்டிக்கும், அனுமதிக்காத பட்சத்தில், தங்கபாலு ஆதரவாளர்கள் மட்டும் சந்தித்து பேசியதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்தார். முகுல் வாஸ்னிக் நேற்று முன்தினம், சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதியம், நிருபர்கள் சந்திப்பு முடிந்த பின், மாலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் நினைவிடம், மூப்பனார் நினைவிடத்துக்குச் சென்று, மரியாதை செலுத்தினார். இரவு, அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். தங்கபாலுவின் ஆதரவாளர்கள், 50 பேர், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும், 10 குழுக்களாக பிரிந்து கொண்டு, முகுல் வாஸ்னிக்கை சந்திக்க முற்பட்டனர். இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் கட்சி பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முகுல் வாஸ்னிக்கிடம், தங்கபாலு ஆதரவாளர்கள் கூறியதாவது: கடந்த, 1969ம் ஆண்டிலிருந்து, காங்கிரஸ் கட்சியை விட்டு, வெளியேறாமல் ஒரே கட்சியில் இருப்பவர் தங்கபாலு. அவருடைய ஆதரவாளர்களுக்கு நிர்வாகிகள் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர், மாநிலத் தலைவராக பணியாற்றிய போது, நியமிக்கப்பட்ட, 18 மாவட்டத் தலைவர்களையும், ஆறு ஆண்டுகள் நீடிக்க விட வேண்டும்; அவர்களை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். தங்கபாலு ஆதரவாளர்கள், முகுல் வாஸ்னிக்கை தனியாக சந்தித்து பேசிய போது, ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் லிஜு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் யுவராஜா ஆகிய இருவரும், முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசினர். அப்போது, இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்தும், யுவராஜா, "சஸ்பெண்ட்' விவகாரம் குறித்தும் விசாரித்தார். யுவராஜாவிடம், இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களை, தன் இ-மெயிலுக்கு தெரிவிக்கும்படி முகுல் வாஸ்னிக் கேட்டுக் கொண்டார்.


சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேலூர் ஞானசேகரன் பேசியதாவது: குலாம் நபி ஆசாத்துக்கு தங்கபாலு நெருக்கமானவராக இருந்தும், அவரால் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட முடியவில்லை. ஞானதேசிகனும் பட்டியலைத் தயாரித்து, குலாம் நபி ஆசாத்திடம் கொடுத்தார். அவரும் சோனியாவின் கையெழுத்து பெறுவதற்கு அனுப்பி வைத்துள்ளார். பட்டியல் வெளிவரவில்லை. ஞானதேசிகன், தனி ஆளாகச் செயல்படுகிறார். நிர்வாகிகள் இல்லாமல் கட்சியை வளர்க்க முடியாது. 12 ஆண்டுகள் நிர்வாகிகள் நியமிக்கவில்லை. எனவே இன்னும், 12 நாட்களுக்குள் நிர்வாகிகளை நியமிக்க, முகுல் வாஸ்னிக் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்பதை, இப்போதே தொண்டர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கடைசி நேரத்தில், இந்த கட்சியுடன் கூட்டணி என்ற முடிவு எடுப்பதால் அந்த கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால் தனித்து போட்டியிடலாம். ராகுல் பிரதமராவதற்கு எம்.பி.,க்கள் வேண்டும் என்றால், தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தாக வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை முதலில் சொல்லி விடுங்கள். கடைசி நேரத்தில் கூட்டணி வைத்தால், தொண்டர்கள் காலை வாரி விடுவர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

"எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து

"எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து


"எதிர்க்கட்சித் தலைவருக்கான சலுகைகளை பயன்படுத்தாத போது, அந்த பதவி போனாலும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு கவலையில்லை' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரும், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். அவர்களை, "சஸ்பெண்ட்' செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். வரும், 10ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி, அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், தங்களை நிரந்தரமாக, கட்சியில் இருந்து நீக்கும்படி, ஏழு எம்.எல்.ஏ.,க்களும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். அவ்வாறு, நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கும் பட்சத்தில், எந்த கட்சியையும் சாராத எம்.எல்.ஏ.,வாக இவர்கள், மீதியுள்ள, மூன்று ஆண்டுகளுக்கும் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது.அதே நேரத்தில், தே.மு.தி.க.,வின் பலம், சட்டசபையில், 22 ஆகக் குறைய வாய்ப்புள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., ஆதரவு தராத கோபத்தில் உள்ள தி.மு.க., தலைமை, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முயற்சிக்கும் என, கூறப்படுகிறது.ஆனால், "எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோவதைப் பற்றி, விஜயகாந்துக்கு எந்த கவலையும் இல்லை' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து விஜயகாந்துக்கு நெருக்கமான தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சென்னை, தலைமை செயலகத்தில், எதிர்க்கட்சித் தலைவருக்கு விசாலமான அறை இருந்தது. சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில், இதை தே.மு.தி.க.,வின், 28 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த விஜயகாந்த் பயன்படுத்தினார்.ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், விடுமுறை நாளில், இந்த அறையை பாதியாகப் பிரித்து, காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த அறையை, எதிர்க்கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,க்களும் பயன்படுத்தாததால் பூட்டியே கிடக்கிறது. அதேபோல, சட்டசபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி, கடந்தாண்டு சட்டசபையில் இருந்து, 10 நாட்களுக்கு விஜயகாந்த், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அப்போது, அவரிடம் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான, சிவப்பு சைரன் விளக்கு பொருத்திய, "இனோவா கார்' பறிமுதல் செய்யப்பட்டது.ஆனால், "சஸ்பெண்ட்' நடவடிக்கை முடிவுக்கு வந்த பிறகும், காரை திரும்பப் பெறாமல், தன் சொந்த காரையே விஜயகாந்த் பயன்படுத்தி வருகிறார். மேலும், சட்டசபையில் நடந்த பிரச்னைக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்வதையே விஜயகாந்த் விரும்பவில்லை. வெளியில் செல்லும் போது தனக்குரிய போலீஸ் பாதுகாப்பையும் அவர் பயன்படுத்துவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி மேல், ஒரு போதும் அவருக்கு ஆசை கிடையாது. அதனால், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைவதால், தன் பதவி பறிபோவது பற்றி அவர் கவலைப்படவில்லை. "கட்சியில் மதிப்பில்லை' என, சாக்கு சொல்லி, ஏழு பேர் துரோகம் செய்துள்ளனர். தைரியம் இருந்தால், ஏழு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பும் விஜயகாந்த், அதற்கான நடவடிக்கைகளை இப்போது துவங்கியுள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


ரயில் கட்டணம் உயராது:ரயில்வே அமைச்சர்

ரயில் கட்டணம் உயராது:ரயில்வே அமைச்சர்;


பெங்களூரு:டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயராது என்று மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் தெரிவித்தார்.ரயில்வே திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பெங்களூரில் நேற்று நடந்தது.இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால், ரயில் திட்டங்களை வேகமாக செயல்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டாலும், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை என்றார்.

தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு:

தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு:


ராஜமுந்திரி: ""தெலுங்கானா விவகாரத்தில், முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக, மத்திய அரசு தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளது,'' என, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் கூறினார்.

ராஜமுந்திரியில், நிருபர்களிடம் பேசிய நரசிம்மன் கூறியதாவது: மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, ஒருமித்த கருத்தும், மக்களிடையே நல்ல புரிதலும் ஏற்பட வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன், இங்கு வந்திருந்த, காங்கிரஸ் பொதுச் செயலரும், மாநில காங்., பொறுப்பாளருமான, திக் விஜய் சிங், தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, அனைத்து தரப்பு மக்களிடமும் பேச்சு நடத்தினார். இதுதொடர்பான அறிக்கையை அவர், காங்., மேலிடத்திடம் சமர்பிக்கவுள்ளார். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, மத்திய அரசும் விரும்புகிறது. இவ்வாறு கவர்னர் நரசிம்மன் கூறினார். 

இதற்கிடையில், ஐதராபாத்தில், நிருபர்களிடம் பேசிய, காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங், ""தெலுங்கானா பிரச்னையில், முடிவெடுக்கும் நிலைமை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இருந்தாலும், எவ்வளவு காலத்திற்குள் முடிவு அறிவிக்கப்படும் என்பதை சொல்ல முடியாது,'' என்றார்.

அதே நேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு முன், தெலுங்கானா விவகாரத்தில், மத்திய அரசு தன் இறுதி முடிவை அறிவிக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டணியா? காங்கிரசுடனா? யார்சொன்னது?: ஸ்டாலின்


கூட்டணியா? காங்கிரசுடனா? யார்சொன்னது?ஸ்டாலின்: 




சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத்தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் தயவுடன் வெற்றி பெற்றார் கனிமொழி. இதனால் திமுக - காங்கிரஸ் இடையே மீண்டும் உறவு மலர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், 


தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் தேர்தல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் முடிவு செய்து அறிவிக்கும். எங்கள் கருத்துகளையும் அந்தக் குழுவுக்குத் தெரிவிப்போம் என்று கூறினார்.

திமுகவின் நிலை இந்தநிலையில் மதுரையில் நடைபெற்ற நிதியளிப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் உடன் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். 


ராஜ்யசபா தேர்தலில் 23 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தது திமுக தலைவர் கருணாநிதியின் ராஜதந்திரம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்ற உரிமையிலேயே காங்கிரசிடம் ஆதரவு கோரப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு கட்சிகளின் நிலைப்பாடும் முரண்பட்டதாலேயே கூட்டணியை விட்டு திமுக வெளியேறியது எனவே இனிவரும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இதுபற்றி தவறான செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 





































Our Collector always great man..அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்

Our Collector always great man..



தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
இனிமேல்வணிகவரித்துறையின்
இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள
பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல்
மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது?
அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக்
கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும்.
வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள்
இருக்கிறார்கள்.
அன்சுல் மிஸ்ராவின் working style-
செண்டான் என்றொரு மனிதர். எங்கள்
அமத்தா ஊர்க்காரர்.
அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல்
கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால்
ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன்
வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல்
விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட
முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.
நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற
அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல்
சேர்ந்துவிட்டது. விவரங்களைக்
கேட்டுவிட்டு அடுத்த நாள்
தனது அலுவலகத்திற்கு வரச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும்,
அவரது மகளும் சென்ற போது தேவையான
பணத்தைக்
கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்
என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம்
இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக்
கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித்
தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன்
இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க
வைத்தவர் அன்சுல்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள்
செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள்
பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில்
உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம்
ஆச்சரியமான அதிகாரிதான்.
சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக்
கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த
போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்
அப்படித்தான் என்று தெரியும்.
இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள்
என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும்
நமக்குத் தெரியும் அல்லவா?

#