Monday 8 July 2013

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை

புத்த கயா கோவில் திறப்பு: சிறப்பு பிரார்த்தனை


புத்த கயா: பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்பின்போது எடுக்கப்பட்ட ரகசிய காமிராக்களில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இதில் பலரும் சிதறி ஓடும் காட்சிகள் தான் இருந்தன என்றும், இதில் குற்றவாளிகளை பிடிக்க பயன்தரும் விஷயங்கள் எதுவுமில்லை என தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கிடையே பக்தர்களுக்கு கோயில் திறக்கப்பட்டது. புத்த பிட்சுள் சிறப்பு பிரார்த்னை செய்தனர்


நேற்று அதிகாலை புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதனை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ‌தொடர்பான விசாரணையி்ல் எவ்வித முன்னேற்றமும் இல்லை. போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

சி.சி.டி.வி. பதிவுகள் வெளியீடு : இந்நிலையி்ல் புத்த கயாவில் வைக்கப்பட்டிருந்த சி.சி.வி. காமிராவில் சில காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது , பார்வையாளர்கள் திடீரென ஏதோ பயங்கர சத்தம் கேட்டு அங்குமிங்கும் பதறியடித்து ஓடுவது போன்று காட்சி அதில் பதிவாகியுள்ளது. இதற்கிடையில் ஒருவ‌ரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

மியான்மர் பயங்கரவாதிகள் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கெளுக்கென இந்தியாவில் உள்ள சில அமைப்பினர் கை கோர்த்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment