Monday 1 July 2013

ரயில் கட்டணம் உயராது:ரயில்வே அமைச்சர்

ரயில் கட்டணம் உயராது:ரயில்வே அமைச்சர்;


பெங்களூரு:டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயராது என்று மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் தெரிவித்தார்.ரயில்வே திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பெங்களூரில் நேற்று நடந்தது.இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால், ரயில் திட்டங்களை வேகமாக செயல்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டாலும், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment